"சீமைக்கருவை மரமொன்றின்
பச்சைப்பாம்பாய் தொங்கும்
இளம்பச்சை காய் ஒதுக்கி,
நறுக்கிய அணில்வால் போன்ற
அதன் பூப்பறித்தேன்.
மெதுமெதுப்பான மஞ்சள்
மகரந்த கொத்தை,
காம்பிலிருந்து உருவி
உள்ளங்கையில் குவித்து ஊத
இவ்வெளியெங்கும் பெய்யும்
மஞ்சள் மழையில்
நனைகிறேன்
ஒரு வெல்வெட்பூச்சி போல.!!"
-அன்றில்
No comments:
Post a Comment