“எப்போதோ வெட்டப்பட்ட சிறகுகள்
எப்போதோ சிந்திய கண்ணீரில்
திரண்ட உப்பு.
எப்போதோ நோட்டமிட்ட விழிகள்.
எப்போதோ வந்துவிட்டிருந்தது கண்களில்
நடுக்கம்.
எப்போதோ திருகப்பட்ட மார்புகள்
எப்போதோ கசங்கிய அடிவானம்
எப்போதோ அறுத்திருக்க வேண்டிய
குறிகள்.
எப்போதோ நல்ல மனநிலையிலிருந்த
அவள்.
எப்போதோ தூக்கில் தொங்கியிருக்க வேண்டிய
கடவுள்.
எப்போதும் தீராத வக்கிர மழை.!!”
எப்போதோ சிந்திய கண்ணீரில்
திரண்ட உப்பு.
எப்போதோ நோட்டமிட்ட விழிகள்.
எப்போதோ வந்துவிட்டிருந்தது கண்களில்
நடுக்கம்.
எப்போதோ திருகப்பட்ட மார்புகள்
எப்போதோ கசங்கிய அடிவானம்
எப்போதோ அறுத்திருக்க வேண்டிய
குறிகள்.
எப்போதோ நல்ல மனநிலையிலிருந்த
அவள்.
எப்போதோ தூக்கில் தொங்கியிருக்க வேண்டிய
கடவுள்.
எப்போதும் தீராத வக்கிர மழை.!!”
No comments:
Post a Comment