“யாருமற்ற பௌர்ணமி இரவில்
நீராட கடலிறங்கியது
கரையோரத் தென்னை.
நெடுங்காலம் நின்ற
சலிப்பு தீர நீந்தியது.
சிறுமீன் கூட்டத்தைக்
கீற்றுகளால் அளைந்து
விளையாடியது.
நிலவைப்பார்த்து நீர்க்குவித்து
ஊதிச்சிரித்தது.
அலையின் பாடலுக்கேற்ப
கடலைக் கட்டிபிடித்து
ஆடத்துவங்கியது.
நழுவி விழுந்த பானைக்கள்
குடித்துக் கடல் ஆர்ப்பரிக்க,
கீற்றுக்கூந்தல் சுழற்றி சுழற்றி
வேகமெடுத்தாடியது.
ஆடலின் உச்சியில்
போதமற்று கடல் வீழ,
நீர்சொட்ட வெளியேறியது
கூந்தல் கோதி.
காலையில் கரையொதுங்கியிருந்தன
இரண்டு கள்ளுப்பானையும்,
ஒர் இளநீர்க்குலையும்.!!”
நீராட கடலிறங்கியது
கரையோரத் தென்னை.
நெடுங்காலம் நின்ற
சலிப்பு தீர நீந்தியது.
சிறுமீன் கூட்டத்தைக்
கீற்றுகளால் அளைந்து
விளையாடியது.
நிலவைப்பார்த்து நீர்க்குவித்து
ஊதிச்சிரித்தது.
அலையின் பாடலுக்கேற்ப
கடலைக் கட்டிபிடித்து
ஆடத்துவங்கியது.
நழுவி விழுந்த பானைக்கள்
குடித்துக் கடல் ஆர்ப்பரிக்க,
கீற்றுக்கூந்தல் சுழற்றி சுழற்றி
வேகமெடுத்தாடியது.
ஆடலின் உச்சியில்
போதமற்று கடல் வீழ,
நீர்சொட்ட வெளியேறியது
கூந்தல் கோதி.
காலையில் கரையொதுங்கியிருந்தன
இரண்டு கள்ளுப்பானையும்,
ஒர் இளநீர்க்குலையும்.!!”
No comments:
Post a Comment