“கரையான் அரித்த கலப்பையிலிருந்து
கொழுவை தட்டியெடுத்தேன்.
துணைபிரிந்த கண்ணீர்
பளபளத்த நுனிவரை
ஓடியிருந்தது.
துக்கம்விசாரிப்பது போல்
கன்னம் ஒத்திக்கொண்டேன்
இன்னும் உழுதமண்ணின் குளிர்ச்சி.
காதருகே ஈனஸ்வரத்தில்
வயல் எப்படியிருக்கென்றது
‘மழையில்லை
பாளம் பாளமா தரிசா’
‘நெல் கொத்தும் கொக்கு’
‘கண்மாயில் தண்ணியில்லை’
‘மூலக்கரை வேம்பு’
‘வெட்டுக்கூலியோட 15௦௦௦ ரூபாய்’
‘தாத்தா’
‘ஒருவருடமாயிற்று’ என்றேன்
நசுங்கிய குரலில் கேட்டது
‘என்னையும், வயலில் வேம்பிருந்த
இடத்தில் புதைத்துவிடேன்’
கன்னத்தோடு வைத்து
இன்னும் அழுத்திக்கொண்டேன்.!!”
கொழுவை தட்டியெடுத்தேன்.
துணைபிரிந்த கண்ணீர்
பளபளத்த நுனிவரை
ஓடியிருந்தது.
துக்கம்விசாரிப்பது போல்
கன்னம் ஒத்திக்கொண்டேன்
இன்னும் உழுதமண்ணின் குளிர்ச்சி.
காதருகே ஈனஸ்வரத்தில்
வயல் எப்படியிருக்கென்றது
‘மழையில்லை
பாளம் பாளமா தரிசா’
‘நெல் கொத்தும் கொக்கு’
‘கண்மாயில் தண்ணியில்லை’
‘மூலக்கரை வேம்பு’
‘வெட்டுக்கூலியோட 15௦௦௦ ரூபாய்’
‘தாத்தா’
‘ஒருவருடமாயிற்று’ என்றேன்
நசுங்கிய குரலில் கேட்டது
‘என்னையும், வயலில் வேம்பிருந்த
இடத்தில் புதைத்துவிடேன்’
கன்னத்தோடு வைத்து
இன்னும் அழுத்திக்கொண்டேன்.!!”
No comments:
Post a Comment