Saturday, 6 September 2014

“சன்னமான தூறலில்
ஒரு மழைநடை.
நீருறிஞ்சிய மணலில்
வெள்ளைத்தோல் வரை
பாதம் அமிழ
பத்மாக்கா கூட நடந்தது போல.
இந்தத் தூறலுக்கு
அவளின் உள்ளங்கை குளிர்ச்சி.
கைரேகைகள் போல் ஓடின
சிறுமழை ஒடைகள்.
குளுமையின் மின்னல்
வெட்டிய புள்ளியில்
என்னுடல் சிலிர்த்துப்
பொடிந்து விழுவதை
மண்புழுவாகிப் பார்க்கிறேன்.!!”

No comments:

Post a Comment