“அன்பில் ஜனித்த சொல்லொன்று
கண்ணாடிப் பார்க்கிறது.
ஆடையை முன்னும் பின்னும்
சரிசெய்கிறது.
ஒப்பனை மிகுதியாய்த் தெரியாமல்
சரிபார்த்துக் கொள்கிறது.
ஒருக்களித்துப் பார்த்து
தான் அழகெனச் சிரிக்கிறது.
யாரும் பார்க்காதபோது கண்ணாடியை
முத்திக்கொள்கிறது.
நா முகட்டிலிருந்து எவ்வி
சிறுகுருவியாய் பறப்பதையும்,
பாடும் இனிய பாடலையும்
நினைத்து மகிழ்கிறது.
தன் இனிமையை எண்ணிச்செருக்குடன்
நடக்கிறது முகடு நோக்கி.
உணர்ச்சியின் அவசரத்தில்
பிறந்த வசவொன்று
உமிழ்நீர்க்குளத்தில் தள்ளிவிட்டுப்
பறக்கிறது பருந்தாக.
பல்லிடைவெளியில் பார்த்தப்படி
மூழ்குகிறது
‘மயிராண்டி நாசமாகப் போக’
எனச் சபித்தபடி.!!”
கண்ணாடிப் பார்க்கிறது.
ஆடையை முன்னும் பின்னும்
சரிசெய்கிறது.
ஒப்பனை மிகுதியாய்த் தெரியாமல்
சரிபார்த்துக் கொள்கிறது.
ஒருக்களித்துப் பார்த்து
தான் அழகெனச் சிரிக்கிறது.
யாரும் பார்க்காதபோது கண்ணாடியை
முத்திக்கொள்கிறது.
நா முகட்டிலிருந்து எவ்வி
சிறுகுருவியாய் பறப்பதையும்,
பாடும் இனிய பாடலையும்
நினைத்து மகிழ்கிறது.
தன் இனிமையை எண்ணிச்செருக்குடன்
நடக்கிறது முகடு நோக்கி.
உணர்ச்சியின் அவசரத்தில்
பிறந்த வசவொன்று
உமிழ்நீர்க்குளத்தில் தள்ளிவிட்டுப்
பறக்கிறது பருந்தாக.
பல்லிடைவெளியில் பார்த்தப்படி
மூழ்குகிறது
‘மயிராண்டி நாசமாகப் போக’
எனச் சபித்தபடி.!!”
No comments:
Post a Comment