“பனம்பழம் பொறுக்க எழுப்பினாள்
கலாக்கா.
வழமைபோல் ஒத்தக்காச்சி
எனக்கென முனங்கிவிட்டு
தூங்கிய என்னைத் தூக்கி
இடுப்பில் வைத்துக்கொண்டு
நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டின் வெளிவிளக்கு
நட்சத்திரம் போல் மின்னும்
தொலைவு பனங்காடு.
வேர்வையுடன் குட்டிகுரா வாசமும்,
பனியின் குளிரும்,
அவள் மார்பின் வெதுவெதுப்பும்
இறுக அணைத்துக்கொள்ள,
பனம்பழம் விழுந்த சத்தம் கேட்டுத்
தூக்க முடியாமல் தூக்கி
அவள் ஓடியபோது
விழித்துக்கொண்டேன்.
அவள் புகைப்படத்தின் முன்
ஒத்தக்காச்சி வைத்திருந்தாள் அம்மா.
அக்கா குட்டிகுரா வாசத்துடன்
சிரித்தது போலிருந்தது.!!”
கலாக்கா.
வழமைபோல் ஒத்தக்காச்சி
எனக்கென முனங்கிவிட்டு
தூங்கிய என்னைத் தூக்கி
இடுப்பில் வைத்துக்கொண்டு
நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டின் வெளிவிளக்கு
நட்சத்திரம் போல் மின்னும்
தொலைவு பனங்காடு.
வேர்வையுடன் குட்டிகுரா வாசமும்,
பனியின் குளிரும்,
அவள் மார்பின் வெதுவெதுப்பும்
இறுக அணைத்துக்கொள்ள,
பனம்பழம் விழுந்த சத்தம் கேட்டுத்
தூக்க முடியாமல் தூக்கி
அவள் ஓடியபோது
விழித்துக்கொண்டேன்.
அவள் புகைப்படத்தின் முன்
ஒத்தக்காச்சி வைத்திருந்தாள் அம்மா.
அக்கா குட்டிகுரா வாசத்துடன்
சிரித்தது போலிருந்தது.!!”
No comments:
Post a Comment