Tuesday, 23 September 2014

“அடிமை வானின் நிலவு தகிக்கிறது.
சூரியன் தன் சாட்டைக்கதிர்களை
சொடுக்கிறது.
இக்கடலின் குளிர்ந்த நீர்மையை
நான் உணர்ந்ததேயில்லை.
மண்ணின் வாசம் என்னை
அன்னியனென்கிறது.
காற்று நீயொரு அடிமையென
கூவுகிறது.
என்னும் ஏன் அடிமைவாழ்வு
என்கிறீர்களா?
நிச்சயம் விடைபெறுவேன்
பணியிடத்துப் பூஞ்செடி
நிச்சயம் பிழைத்துக்கொள்ளுமென
நம்பிக்கை வருமோர் நாளில்.!!"

No comments:

Post a Comment