“தமிழ்க்குட்டி முயல் வரையவேண்டுகிறாள்.
வெண்ணிற கொழுத்த முயல் வரைந்தேன்.
முயல் பறக்குமா என்கிறாள்
ஓடும் பாதை வரைந்தேன்
பாதை எங்கே போகுதென்கிறாள்
பாதை சேரும் மலை வரைந்தேன்
மலை வரைந்த கை தானே
மறையும் சூரியனையும்
இறகு விரித்த பறவையையும்
வரைந்து விடுகிறது.
முயல் ஏன் ஓடுகிறதென்றாள்
குறிவைக்கும் துப்பாக்கியும்,
அது மறைந்து கொள்ள
காட்டையும் வரைந்தேன்.
அத்தனை வாஞ்சையுடன்
மடியிலெடுத்து வைத்துக்கொண்டாள்
என்னை நடுங்கிய சிறு முயலாக.!!”
வெண்ணிற கொழுத்த முயல் வரைந்தேன்.
முயல் பறக்குமா என்கிறாள்
ஓடும் பாதை வரைந்தேன்
பாதை எங்கே போகுதென்கிறாள்
பாதை சேரும் மலை வரைந்தேன்
மலை வரைந்த கை தானே
மறையும் சூரியனையும்
இறகு விரித்த பறவையையும்
வரைந்து விடுகிறது.
முயல் ஏன் ஓடுகிறதென்றாள்
குறிவைக்கும் துப்பாக்கியும்,
அது மறைந்து கொள்ள
காட்டையும் வரைந்தேன்.
அத்தனை வாஞ்சையுடன்
மடியிலெடுத்து வைத்துக்கொண்டாள்
என்னை நடுங்கிய சிறு முயலாக.!!”
No comments:
Post a Comment