“பனையேறும் முருகேசன் படத்தின் மேல்
குங்குமப் பொட்டு.
சலசலக்கும் பனங்காட்டில்
மொட்டைமுனி தனியே.
கோந்தைவண்டி ஒட்டிய
வரப்புகளில் கருவைச்செடிகள்.
கள் நுரைத்த இடங்களில்
காலி மதுப்புட்டிகள்.
காற்றில் அழுகிய
பனம்பழ வாசம்.
ஓலைக்காத்தாடி சுற்றியக்
கைகளைக் காணோம்.
பனையோலை வேய்ந்த
மாட்டுக்கொட்டகை மட்கியிருந்தது.
என்றோ வெட்டிய நுங்குநீர் ஈரத்தில்
துருப்பிடித்துக் கிடந்தது
அரிவாள்.!!”
குங்குமப் பொட்டு.
சலசலக்கும் பனங்காட்டில்
மொட்டைமுனி தனியே.
கோந்தைவண்டி ஒட்டிய
வரப்புகளில் கருவைச்செடிகள்.
கள் நுரைத்த இடங்களில்
காலி மதுப்புட்டிகள்.
காற்றில் அழுகிய
பனம்பழ வாசம்.
ஓலைக்காத்தாடி சுற்றியக்
கைகளைக் காணோம்.
பனையோலை வேய்ந்த
மாட்டுக்கொட்டகை மட்கியிருந்தது.
என்றோ வெட்டிய நுங்குநீர் ஈரத்தில்
துருப்பிடித்துக் கிடந்தது
அரிவாள்.!!”
No comments:
Post a Comment