“சிவப்பு பலூன் கொத்தை
வெறித்தவாறு கடக்கிறாள்
சிறுமி.
பற்றியிருந்த தந்தை கரங்களில்
அத்தனை கடுமை.
அவள் கண்களில் அசைகிறது
பலூன் ஏக்க நிழலாய்.
கைகளில் சாம்பல் பூத்திருந்த
தாயின் மிருதுமார்புகள்.
‘பலூன் வேண்டுமா?’ என சைகையால்
கேட்க நினைத்த கணம்
அவள் உடலிலிருந்து எழும்பி
பறக்கத் தொடங்கியிருந்தாள்
பலூன்கொத்தைப் பிடித்தபடி.!!”
வெறித்தவாறு கடக்கிறாள்
சிறுமி.
பற்றியிருந்த தந்தை கரங்களில்
அத்தனை கடுமை.
அவள் கண்களில் அசைகிறது
பலூன் ஏக்க நிழலாய்.
கைகளில் சாம்பல் பூத்திருந்த
தாயின் மிருதுமார்புகள்.
‘பலூன் வேண்டுமா?’ என சைகையால்
கேட்க நினைத்த கணம்
அவள் உடலிலிருந்து எழும்பி
பறக்கத் தொடங்கியிருந்தாள்
பலூன்கொத்தைப் பிடித்தபடி.!!”
No comments:
Post a Comment