Wednesday, 24 December 2014

“இந்த மணலுக்குள்ளே தான்
மீன்கள் எதிர்ப்பக்கம் ஏறுகின்றன
தாத்தாவின் தோளமர்ந்து நான்
கடந்துகொண்டிருக்கிறேன்.
யாரோ உரசிய மஞ்சள் வாசம் 
வீசிக்கொண்டிருக்கிறது.
இந்தப் பூவரசம் தன் முகத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தது.
வயிறு நிறைய மேய்ந்த லட்சுமி
தண்ணீர் குடிக்கிறது.
எங்கெங்கோ உண்டான குமிழ்கள்
உடைகின்றன.
கண்முன்னே தனமக்கா மூழ்கிக்கொண்டிருக்கிறாள்.
இந்த மணலுக்குள்ளே தான்
இன்னும் எங்களூர் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.!!"

No comments:

Post a Comment