“ஏதேச்சையா தலையில் இடித்தது சுவற்றில் மாட்டியிருந்த வாய்க்கூடு.அதனுள்ளே பச்சை படிந்த கழுத்துமணி.இப்போது தான் எங்கும் இல்லை. அப்போது எல்லா வீட்டிலும் வண்டிமாடு இருக்கும்.எங்க வீட்டில் பெரிய மாடும்,சின்ன மாடும்.
பேருதான் பெரிய மாடு. அம்புட்டு சாது.அப்புராணி. தண்ணிக்காட்ட போன அதுவே எழுந்திருச்சி நிக்கும்.அவுத்து விட்ட நேரா ஜல்ஜல்னு அமைதியா அது பாட்டுக்கு போகும்.
சின்னவுகளுக்குப் பயங்கரக் குசும்பு. தண்ணிக்காட்ட அவுக்கப் போகும் போது தான் துரைக்கு மூத்திரம் வரும். ‘சார் வெய்ட் பண்ணமாட்டிங்களோ கொஞ்சம்’கிற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு ஆற அமர மூத்திரம் போகும்.
ஒரு தவிட்டுப்பானை, அப்புறம் ரெண்டுபேருக்கும் தனித்தனியா தண்ணிக்கு ரெண்டு தொட்டிக்கல்லு.அவுத்து விட்ட உடனே நேராப்போய்க் குடிச்சிட்டு இருக்கிற பெரிய மாட்ட ஒரு முட்டு முட்டுவாக. அது பயந்திட்டு ஒதுங்கி நிக்கும். இருக்கிற தவிட்டைலா காலி பண்ணிட்டு பெரிய மாட்டை வாலால ஒரு அடி அடிச்சிட்டு தண்ணித்தொட்டிக்கு போவாகச் சின்னவுக. பெருசு மிச்சத்தை நக்கிப்புட்டு தண்ணிக்குடிக்க வரும். சின்னது தண்ணிய போட்டுட்டு ரெடியா இருப்பாக.
பெருசு வாய வைக்கிறப்ப போய் இவுகளும் வாய விடுவாக.பெருச முட்டி தள்ளுவாக.தனியா புடிச்சுக் கட்டினா கத்திகிட்டே இருக்கும்.பெருசை நிம்மதியா தண்ணிகூடக் குடிக்க விடாது. சரி கழுதை தொலையுதுன்னு பெருசு அமைதியா இருக்கும்.வண்டில கூடச் சின்னதைப் பூட்டிட்டு தான் பெருச பூட்டுறது. ஆனா வண்டியிலும் சரி , உழுவறப்பயும் சரி ஒரு சேடு பண்ணாது.
என்னா கதிரடிக்கும் போது தான் கொஞ்சம் வாய நீட்டும் சின்னது. அதுக்குத் தான் வாய்க்கூடு.பெருசு வைக்கோல தொடாது.
ஒருநாள் சூழ்நிலை காரணமா பெருசை வித்துப்புட்டார் ஐயா.அதுல இருந்து சின்னது ஒரு கத்து கூடக் கத்தல. சும்மா பேருக்குத் தவிட்டை நக்கிபுட்டு, ரெண்டு வாய் தண்ணியக்குடிச்சிப்புட்டு வந்து படுத்துரும். பக்கத்துல போனா உப்புத்தாள் நாக்கால ரெண்டு நக்கு நக்கும்.லேசா தலைய நம்மளோட அணைவா சாய்ச்சிக்கும்.காலப்போக்குல சின்னதையும் வித்து, ஊரே ஒரு வண்டிமாடு கூட இல்லமா வழிச்சுப் போட்டமாதிரி ஆகிப்போச்சு.
அந்த வாய்க்கூட்டை எடுத்து கையில வச்சிக்கிறேன்.உள்ள இருந்து ஒரு உப்புத்தாள் நாக்கு எட்டிப்பாக்குது நக்க.கழுத்துமணி சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.!!”
பேருதான் பெரிய மாடு. அம்புட்டு சாது.அப்புராணி. தண்ணிக்காட்ட போன அதுவே எழுந்திருச்சி நிக்கும்.அவுத்து விட்ட நேரா ஜல்ஜல்னு அமைதியா அது பாட்டுக்கு போகும்.
சின்னவுகளுக்குப் பயங்கரக் குசும்பு. தண்ணிக்காட்ட அவுக்கப் போகும் போது தான் துரைக்கு மூத்திரம் வரும். ‘சார் வெய்ட் பண்ணமாட்டிங்களோ கொஞ்சம்’கிற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு ஆற அமர மூத்திரம் போகும்.
ஒரு தவிட்டுப்பானை, அப்புறம் ரெண்டுபேருக்கும் தனித்தனியா தண்ணிக்கு ரெண்டு தொட்டிக்கல்லு.அவுத்து விட்ட உடனே நேராப்போய்க் குடிச்சிட்டு இருக்கிற பெரிய மாட்ட ஒரு முட்டு முட்டுவாக. அது பயந்திட்டு ஒதுங்கி நிக்கும். இருக்கிற தவிட்டைலா காலி பண்ணிட்டு பெரிய மாட்டை வாலால ஒரு அடி அடிச்சிட்டு தண்ணித்தொட்டிக்கு போவாகச் சின்னவுக. பெருசு மிச்சத்தை நக்கிப்புட்டு தண்ணிக்குடிக்க வரும். சின்னது தண்ணிய போட்டுட்டு ரெடியா இருப்பாக.
பெருசு வாய வைக்கிறப்ப போய் இவுகளும் வாய விடுவாக.பெருச முட்டி தள்ளுவாக.தனியா புடிச்சுக் கட்டினா கத்திகிட்டே இருக்கும்.பெருசை நிம்மதியா தண்ணிகூடக் குடிக்க விடாது. சரி கழுதை தொலையுதுன்னு பெருசு அமைதியா இருக்கும்.வண்டில கூடச் சின்னதைப் பூட்டிட்டு தான் பெருச பூட்டுறது. ஆனா வண்டியிலும் சரி , உழுவறப்பயும் சரி ஒரு சேடு பண்ணாது.
என்னா கதிரடிக்கும் போது தான் கொஞ்சம் வாய நீட்டும் சின்னது. அதுக்குத் தான் வாய்க்கூடு.பெருசு வைக்கோல தொடாது.
ஒருநாள் சூழ்நிலை காரணமா பெருசை வித்துப்புட்டார் ஐயா.அதுல இருந்து சின்னது ஒரு கத்து கூடக் கத்தல. சும்மா பேருக்குத் தவிட்டை நக்கிபுட்டு, ரெண்டு வாய் தண்ணியக்குடிச்சிப்புட்டு வந்து படுத்துரும். பக்கத்துல போனா உப்புத்தாள் நாக்கால ரெண்டு நக்கு நக்கும்.லேசா தலைய நம்மளோட அணைவா சாய்ச்சிக்கும்.காலப்போக்குல சின்னதையும் வித்து, ஊரே ஒரு வண்டிமாடு கூட இல்லமா வழிச்சுப் போட்டமாதிரி ஆகிப்போச்சு.
அந்த வாய்க்கூட்டை எடுத்து கையில வச்சிக்கிறேன்.உள்ள இருந்து ஒரு உப்புத்தாள் நாக்கு எட்டிப்பாக்குது நக்க.கழுத்துமணி சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.!!”
No comments:
Post a Comment