"தனமக்கா அப்படித்தான்
நிற்பாள்
ஏதோ பெயர் கிறுக்கியழித்த
தென்னை வளையத்தை
தடவியபடி அண்ணாந்து
மரம் பார்த்து.
கொஞ்ச நாளாய்
அணில்குஞ்சொன்று அதுவரை
ஏறிப்பார்த்துவிட்டு இறங்குகிறது.
அக்கா இருந்திருந்தால்
தோடு குலுங்க சிரிப்பாள்.!!"
நிற்பாள்
ஏதோ பெயர் கிறுக்கியழித்த
தென்னை வளையத்தை
தடவியபடி அண்ணாந்து
மரம் பார்த்து.
கொஞ்ச நாளாய்
அணில்குஞ்சொன்று அதுவரை
ஏறிப்பார்த்துவிட்டு இறங்குகிறது.
அக்கா இருந்திருந்தால்
தோடு குலுங்க சிரிப்பாள்.!!"
No comments:
Post a Comment