"நேற்றிலிருந்து ஒரு பொட்டுக்கூட அழவில்லை.
இறப்பின் கசடுகள் அழுத்த
அவள் சோர்வாயிருந்தாள்.
அவள் முகம் பார்த்து சிரிக்க முயன்று தோற்கிறேன்.
நட்சத்திரங்கள் வீசியெறியும் சிரிப்பு இனி
அவளிடம் வரப்போவதில்லை.
துக்கம் மீறிப் பேசுகையில் அவள் உதடுகள்
உலர்ந்து,ஒலியற்று பிரிய மறுக்கிறது.
எங்கோ வெறித்துப்பார்த்தப்படி விரல்கள்
சுவற்றில் ஏதோ கிறுக்குகின்றன.
மெல்ல நெருங்கி 'சாப்பிடுறியாம்மா' என்கிறேன்.
திடுக்கிட்டுத்திரும்பி 'அம்மாவென'
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.!!"
இறப்பின் கசடுகள் அழுத்த
அவள் சோர்வாயிருந்தாள்.
அவள் முகம் பார்த்து சிரிக்க முயன்று தோற்கிறேன்.
நட்சத்திரங்கள் வீசியெறியும் சிரிப்பு இனி
அவளிடம் வரப்போவதில்லை.
துக்கம் மீறிப் பேசுகையில் அவள் உதடுகள்
உலர்ந்து,ஒலியற்று பிரிய மறுக்கிறது.
எங்கோ வெறித்துப்பார்த்தப்படி விரல்கள்
சுவற்றில் ஏதோ கிறுக்குகின்றன.
மெல்ல நெருங்கி 'சாப்பிடுறியாம்மா' என்கிறேன்.
திடுக்கிட்டுத்திரும்பி 'அம்மாவென'
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.!!"
No comments:
Post a Comment