Wednesday, 24 December 2014

"இலையுதிர்க்காலம்
காற்றின் மெல்லிய பேச்சுக்குக் கூட
இலைகள் தலையாட்டிச் சாகின்றன.
உனது நினைவாக சேர்த்து வைக்கப்பட்ட
குறுந்தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
அழிக்கப்படுகிறது என்னால்
கடந்துபோன வசந்தகாலத்தை நினைத்தபடி.
நினைவுகளின் பதிவிலிருந்து மறைய
மறுக்கிறது உன்முகம்.
ஏனோ தளிர்களுடன் நின்ற மரத்தை
பார்க்கத் தோன்றுவதில்லை.
எனது பிரதிபலிப்பாய் இருந்த மரம்
மறைய மறுக்கிறது நினைவுகளிலிருந்து.!!"

No comments:

Post a Comment