“ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்திருக்கிறீர்களா?
விரல்களில் வண்ணம் பதிய
பிடித்துக் கொல்வதல்ல.
புல்லின் நடக்கும் குழந்தையின்
கால்களுடன் அதைப் பின்தொடர்தல்.
தேனுண்டு மயங்குமதைக் கண்டு
கன்றை நோக்கும் பசுவாதல்.
மயங்குதலின் உச்சியில்
சின்னக்கண்களின் சூரியனை
குளிர்ந்த உங்கள் கண்களுக்கு
இடம்மாற்றிக்கொள்ளுதல்.
மலரை முத்தமிடுவது போன்ற
ஸ்பரிசத்துடன் அதன் இறக்கைகளைப் பிடித்தல்.
அந்தக்கால்களுக்கு ஓய்வு தர
முல்லைப்பூவின் மென்மைக்கு உங்கள் கைகளை
மாற்றிக்கொள்ளுதல்.
இருத்தலையும் பறத்தலையும்
அதனைத் தேர்வு செய்ய விடுதல்.
கனன்ற சூரியனைத் திருப்பித்தந்து
குளிர்வுடன் நோக்குதல்.
தான் ஒரு பட்டாம்பூச்சி என்ற உணர்வுடன்
அதனை இருக்கவிடுதல்.
பட்டாம்பூச்சியை ஒரு பட்டாம்பூச்சியாய்
பார்த்தல்.
இப்போது பிடியுங்கள் ஒரு பட்டாம்பூச்சியை
அல்லது
நீங்களே ஒரு பட்டாம்பூச்சி.!!”
விரல்களில் வண்ணம் பதிய
பிடித்துக் கொல்வதல்ல.
புல்லின் நடக்கும் குழந்தையின்
கால்களுடன் அதைப் பின்தொடர்தல்.
தேனுண்டு மயங்குமதைக் கண்டு
கன்றை நோக்கும் பசுவாதல்.
மயங்குதலின் உச்சியில்
சின்னக்கண்களின் சூரியனை
குளிர்ந்த உங்கள் கண்களுக்கு
இடம்மாற்றிக்கொள்ளுதல்.
மலரை முத்தமிடுவது போன்ற
ஸ்பரிசத்துடன் அதன் இறக்கைகளைப் பிடித்தல்.
அந்தக்கால்களுக்கு ஓய்வு தர
முல்லைப்பூவின் மென்மைக்கு உங்கள் கைகளை
மாற்றிக்கொள்ளுதல்.
இருத்தலையும் பறத்தலையும்
அதனைத் தேர்வு செய்ய விடுதல்.
கனன்ற சூரியனைத் திருப்பித்தந்து
குளிர்வுடன் நோக்குதல்.
தான் ஒரு பட்டாம்பூச்சி என்ற உணர்வுடன்
அதனை இருக்கவிடுதல்.
பட்டாம்பூச்சியை ஒரு பட்டாம்பூச்சியாய்
பார்த்தல்.
இப்போது பிடியுங்கள் ஒரு பட்டாம்பூச்சியை
அல்லது
நீங்களே ஒரு பட்டாம்பூச்சி.!!”
No comments:
Post a Comment