இத்தனைக்குப் பின்பும்
நம்புகிறாளென்பது
எத்துணை ஆசுவாசம்.
என் பிழைகளை
எவ்வளவு எளிதாக
புறக்கணித்திருக்கிறாள்.
அழகாக வெள்ளரி அரிந்து
உப்பு மிளகாய்ப்பொடியிட
முடிகிறது அவளால்.
எவ்வளவு நேர்த்தியான துண்டுகள்
என் பிழைகளைப் போல்.
மனம் கூசி எங்கோ
வெறித்துப் பார்க்கிறேன்.
துண்டொன்றை வாயருகே
நீட்டிச் சிரிக்கிறாள்.
கண்கள் தளும்பிச் சரிகிறேன்.
தொடை நடுவில் முகமெடுத்து
புதைத்துக் கொள்கிறாள்.
இந்த இருட்டில் தொலைந்து
எவ்வளவு நாட்களாயிற்று.
முதுகில் இரண்டு சொட்டுக் கண்ணீர்
தடவலின் வெம்மையில்
கரைந்து விட்டிருந்தேன்
உப்பாக.!!
நம்புகிறாளென்பது
எத்துணை ஆசுவாசம்.
என் பிழைகளை
எவ்வளவு எளிதாக
புறக்கணித்திருக்கிறாள்.
அழகாக வெள்ளரி அரிந்து
உப்பு மிளகாய்ப்பொடியிட
முடிகிறது அவளால்.
எவ்வளவு நேர்த்தியான துண்டுகள்
என் பிழைகளைப் போல்.
மனம் கூசி எங்கோ
வெறித்துப் பார்க்கிறேன்.
துண்டொன்றை வாயருகே
நீட்டிச் சிரிக்கிறாள்.
கண்கள் தளும்பிச் சரிகிறேன்.
தொடை நடுவில் முகமெடுத்து
புதைத்துக் கொள்கிறாள்.
இந்த இருட்டில் தொலைந்து
எவ்வளவு நாட்களாயிற்று.
முதுகில் இரண்டு சொட்டுக் கண்ணீர்
தடவலின் வெம்மையில்
கரைந்து விட்டிருந்தேன்
உப்பாக.!!
No comments:
Post a Comment