அவள் இப்படிபட்டவளில்லை.
என் சொல்லின் சூடு தாளாமல்
மௌனப் பாலையில்
புதைந்திருக்கிறாள்.
முடிந்து முடிந்து அவிழ்க்கும்
ஆள்காட்டிவிரலின்
சீலைமுடிச்சுகளின் தடம்
கழுத்தில் மெல்லப் பதிகிறது.
விழாமல் கனிந்து நிற்கும்
கண்ணீர்த்துளிகள்
மனதெரிக்கிறது.
வழக்கமான கால அளவைத் தாண்டி
உயிர் இறுக்குகிறாள்.
இனி நடவாதென எழும் நேரம்
தோள் பற்றித் தலை சாய்க்கிறாள்
யூகலிப்டஸ் வாசத்துடன்
கொட்டுகிறது கண்ணீர்.
முடிச்சுகளில் இப்போது
இருவிரல்கள்.!!
என் சொல்லின் சூடு தாளாமல்
மௌனப் பாலையில்
புதைந்திருக்கிறாள்.
முடிந்து முடிந்து அவிழ்க்கும்
ஆள்காட்டிவிரலின்
சீலைமுடிச்சுகளின் தடம்
கழுத்தில் மெல்லப் பதிகிறது.
விழாமல் கனிந்து நிற்கும்
கண்ணீர்த்துளிகள்
மனதெரிக்கிறது.
வழக்கமான கால அளவைத் தாண்டி
உயிர் இறுக்குகிறாள்.
இனி நடவாதென எழும் நேரம்
தோள் பற்றித் தலை சாய்க்கிறாள்
யூகலிப்டஸ் வாசத்துடன்
கொட்டுகிறது கண்ணீர்.
முடிச்சுகளில் இப்போது
இருவிரல்கள்.!!
No comments:
Post a Comment