ராமசாமிக்கு பேரன் பரிசு வாங்குறத பாக்கப்போறதுல சந்தோசம் தான். ஆனா கடுதாசியோட வந்த பொட்டணம் தான்....
நல்லா இத்துப்போகாத வேட்டியா ஏதாவது கம்பிகிம்பி பட்டுப் பொத்துப்போனதாப் பாத்து டார்டாரா
கிழித்து வைத்துக்கொள்வார். எல்லாமே ஒரே நீள அகலத்தில்.குளிக்கும்போது கூடவே துவைத்துவிடுவார்.கொடியில் அழகாய் ஊமத்தம் பூ போல் அவை ஆடிக்கொண்டிருக்கும்.
அந்த வெள்ளைக்கும், சிவப்பு பட்டுக்கயிறுக்கும் அவ்வளவு அழகாக இருக்கும் அவர் உழும்போது.
‘மறக்காம போட்டுட்டு வந்துடு’
‘யய்யா உங்கப்பன் தைச்சுகொடுத்த பட்டாபட்டியே இன்னும் போட்டதில்லைய்யா. இத ?’
‘கோமணத்தைக் கட்டிட்டு வந்து மானத்தை வாங்கிறாதே’
‘..........ம்ம்ம்.’
ஆண்டாண்டு காலம் இதைக்கட்டித்தானே மானம் காத்தோம். இப்ப என்ன மானம் போகுது? ஒண்ணும் புரியல.
தேதி நெருங்க நெருங்க பயம் வந்துடுச்சு. ஈரக்குலைய யாரோ விட்டு விட்டு உருவுற மாதிரி.அடிக்கடி கொடியில் காயும் கோமணத்தைத் தடவிப்பார்த்தப்படியே நின்றிருந்தார்.
வயலைப் பாத்தா நாத்தெல்லாம் வெள்ளை வெளேர்ன்னு அசையுது. கனவுலயும் ஏதோ ஒரு கை கோமணத்தை உருவுற மாதிரி வந்துச்சு.
தண்ணியக்குடிச்சிட்டு திரும்பிப் படுத்தா கோமணம் புலம்புது காதுக்குள்ள,
‘நேத்து வந்த பய சொல்றான்னு அறுபது எழுபது வருடம் உடம்போட ஒட்டிக்கிடந்த என்னை அத்தெறியப் போறியா ?’
மகன் முன்பக்கம் பின்பக்கம் சொல்லிக் கொடுத்திட்டுப் போனார்.மெல்லக் கோமணத்தை உருவியெடுத்தார்.வாழ்வில் முதன்முதலாய் எல்லார் முன்னும் நிர்வாணமாய் நிற்பதாய்ப் பட்டது. தரையில் கிடந்த கோமணம் காற்றில் அசைந்தது. ஜட்டிக்குள் காலை நுழைத்தவாறே சுவற்றில் சரிந்தார்.அட்டையிலிருந்த மனிதக்கண்களை மூடியப்படிக்கிடந்தது கோமணம். !!
நல்லா இத்துப்போகாத வேட்டியா ஏதாவது கம்பிகிம்பி பட்டுப் பொத்துப்போனதாப் பாத்து டார்டாரா
கிழித்து வைத்துக்கொள்வார். எல்லாமே ஒரே நீள அகலத்தில்.குளிக்கும்போது கூடவே துவைத்துவிடுவார்.கொடியில் அழகாய் ஊமத்தம் பூ போல் அவை ஆடிக்கொண்டிருக்கும்.
அந்த வெள்ளைக்கும், சிவப்பு பட்டுக்கயிறுக்கும் அவ்வளவு அழகாக இருக்கும் அவர் உழும்போது.
‘மறக்காம போட்டுட்டு வந்துடு’
‘யய்யா உங்கப்பன் தைச்சுகொடுத்த பட்டாபட்டியே இன்னும் போட்டதில்லைய்யா. இத ?’
‘கோமணத்தைக் கட்டிட்டு வந்து மானத்தை வாங்கிறாதே’
‘..........ம்ம்ம்.’
ஆண்டாண்டு காலம் இதைக்கட்டித்தானே மானம் காத்தோம். இப்ப என்ன மானம் போகுது? ஒண்ணும் புரியல.
தேதி நெருங்க நெருங்க பயம் வந்துடுச்சு. ஈரக்குலைய யாரோ விட்டு விட்டு உருவுற மாதிரி.அடிக்கடி கொடியில் காயும் கோமணத்தைத் தடவிப்பார்த்தப்படியே நின்றிருந்தார்.
வயலைப் பாத்தா நாத்தெல்லாம் வெள்ளை வெளேர்ன்னு அசையுது. கனவுலயும் ஏதோ ஒரு கை கோமணத்தை உருவுற மாதிரி வந்துச்சு.
தண்ணியக்குடிச்சிட்டு திரும்பிப் படுத்தா கோமணம் புலம்புது காதுக்குள்ள,
‘நேத்து வந்த பய சொல்றான்னு அறுபது எழுபது வருடம் உடம்போட ஒட்டிக்கிடந்த என்னை அத்தெறியப் போறியா ?’
மகன் முன்பக்கம் பின்பக்கம் சொல்லிக் கொடுத்திட்டுப் போனார்.மெல்லக் கோமணத்தை உருவியெடுத்தார்.வாழ்வில் முதன்முதலாய் எல்லார் முன்னும் நிர்வாணமாய் நிற்பதாய்ப் பட்டது. தரையில் கிடந்த கோமணம் காற்றில் அசைந்தது. ஜட்டிக்குள் காலை நுழைத்தவாறே சுவற்றில் சரிந்தார்.அட்டையிலிருந்த மனிதக்கண்களை மூடியப்படிக்கிடந்தது கோமணம். !!
No comments:
Post a Comment