கொட்டைச்செடி பாலெடுத்து, வைக்கோல் குழலில் குமிழூதுகிறாள்.ஒட்டியும் ஒட்டாமலும்
பறக்கின்றன கண்ணாடிக்குமிழ்கள்.நான் கெண்டைக்காலருகே கொலுசை நோக்கி நாக்கை விட்டுவிட்டு நீட்டும் பாம்புராணியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.முத்தம் பெற்ற கொலுசுமுத்துகள் சிவந்த குண்டுமணியாகிருந்தன.
அவள் பிடியில் சேகரண்ணன் சிகரெட் பிடிக்கும் சாயல். ஒவ்வொரு குமிழ் பிரிவதையும் ஆழ்ந்த நிதானத்துடன் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் கண்களே வெள்ளை குண்டுமணி போலிருந்தன.கண்ணிலிருந்து வழிந்த நேசம் குமிழ்களை மெல்ல மெல்ல கீழே விழாமல் ஊதிக்கொண்டே சென்றது. .அண்ணாந்த அவள் நெத்தியிலும், வலது கண்ணிலும் குமிழின் நிழல் மெதுவாக ஊர்ந்தது.
‘பாரேன் எவ்ளோ அழகா பறக்குதுன்னு’
‘யக்கோவ் பாம்புராணி கடிக்குமா?’
‘டேய் ஒருநா இது மேல ஏறி உலகத்தைச் சுத்தணும்டா.நம்ம சேகரைப் பாக்க சிங்கப்பூர் வரையாவது’
‘ஏங்கா பாம்புராணி நாக்கை உள்ள வச்சுக்காத?’
‘நாம ஏறுனா அது உடைஞ்சிரும்லடா.நீ வேற கன்னுக்குட்டியாட்டம் இருக்க’
‘நாக்கு பட்டா விஷமாக்கா?’
‘போடா எல்லாம் உடைஞ்சிருச்சு. ஒண்ணே ஒண்ணு மட்டும் போகுதுடா’
பாம்புராணி நகல, ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன்.சட்டைப்பையிலுள்ள குண்டுமணிகள் என் நெஞ்சிற்கும் அவள் தொடைக்கும் இடையே உருளத் தொடங்கின.
வா போவோமென்று இடுப்பில் தூக்கி வைத்து முத்தமிட்டாள்.அது எனக்கான முத்தமில்லையென்றாலும் அந்த எச்சில் உள்ளுக்குள் குமிழ் குமிழாய் இறங்கியது.அம்மாவின் அதே எச்சில் ஈரம்.சிவப்புத்தாவணியை என் முகத்தில் வெயில் படாமல் இறக்கிவிட்டவாறு நடக்கத்துவங்கினாள்.
குலுங்க குலுங்க குண்டுமணியெல்லாம் குதித்து விழத்தொடங்கியது வழியெங்கும்.புருவத்திற்குக் கிடையாய் கையை வைத்து பார்த்தவாறு சொன்னாள்
‘டேய் அது சிங்கப்பூர் பிளேன் போற பக்கம் போதுடா’
தாவணி வழியே பாத்தேன். அக்காவின் அன்பு ஒரு குமிழாய்ப் போய்க்கொண்டிருந்தது.
‘அது அம்மாகிட்ட கூடப் போகுமாக்கா?’
‘அதுக்கு இன்னும் ரொம்பப் பாலெடுத்து, பெரிய வைக்கோல்ல, பெரிய முட்டையா ஊதணும்டா.நாளைக்கு போவோமா...?’
நான் எவ்வி அவள் கன்னத்தை முத்தமிட்டேன்.!!
பறக்கின்றன கண்ணாடிக்குமிழ்கள்.நான் கெண்டைக்காலருகே கொலுசை நோக்கி நாக்கை விட்டுவிட்டு நீட்டும் பாம்புராணியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.முத்தம் பெற்ற கொலுசுமுத்துகள் சிவந்த குண்டுமணியாகிருந்தன.
அவள் பிடியில் சேகரண்ணன் சிகரெட் பிடிக்கும் சாயல். ஒவ்வொரு குமிழ் பிரிவதையும் ஆழ்ந்த நிதானத்துடன் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் கண்களே வெள்ளை குண்டுமணி போலிருந்தன.கண்ணிலிருந்து வழிந்த நேசம் குமிழ்களை மெல்ல மெல்ல கீழே விழாமல் ஊதிக்கொண்டே சென்றது. .அண்ணாந்த அவள் நெத்தியிலும், வலது கண்ணிலும் குமிழின் நிழல் மெதுவாக ஊர்ந்தது.
‘பாரேன் எவ்ளோ அழகா பறக்குதுன்னு’
‘யக்கோவ் பாம்புராணி கடிக்குமா?’
‘டேய் ஒருநா இது மேல ஏறி உலகத்தைச் சுத்தணும்டா.நம்ம சேகரைப் பாக்க சிங்கப்பூர் வரையாவது’
‘ஏங்கா பாம்புராணி நாக்கை உள்ள வச்சுக்காத?’
‘நாம ஏறுனா அது உடைஞ்சிரும்லடா.நீ வேற கன்னுக்குட்டியாட்டம் இருக்க’
‘நாக்கு பட்டா விஷமாக்கா?’
‘போடா எல்லாம் உடைஞ்சிருச்சு. ஒண்ணே ஒண்ணு மட்டும் போகுதுடா’
பாம்புராணி நகல, ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன்.சட்டைப்பையிலுள்ள குண்டுமணிகள் என் நெஞ்சிற்கும் அவள் தொடைக்கும் இடையே உருளத் தொடங்கின.
வா போவோமென்று இடுப்பில் தூக்கி வைத்து முத்தமிட்டாள்.அது எனக்கான முத்தமில்லையென்றாலும் அந்த எச்சில் உள்ளுக்குள் குமிழ் குமிழாய் இறங்கியது.அம்மாவின் அதே எச்சில் ஈரம்.சிவப்புத்தாவணியை என் முகத்தில் வெயில் படாமல் இறக்கிவிட்டவாறு நடக்கத்துவங்கினாள்.
குலுங்க குலுங்க குண்டுமணியெல்லாம் குதித்து விழத்தொடங்கியது வழியெங்கும்.புருவத்திற்குக் கிடையாய் கையை வைத்து பார்த்தவாறு சொன்னாள்
‘டேய் அது சிங்கப்பூர் பிளேன் போற பக்கம் போதுடா’
தாவணி வழியே பாத்தேன். அக்காவின் அன்பு ஒரு குமிழாய்ப் போய்க்கொண்டிருந்தது.
‘அது அம்மாகிட்ட கூடப் போகுமாக்கா?’
‘அதுக்கு இன்னும் ரொம்பப் பாலெடுத்து, பெரிய வைக்கோல்ல, பெரிய முட்டையா ஊதணும்டா.நாளைக்கு போவோமா...?’
நான் எவ்வி அவள் கன்னத்தை முத்தமிட்டேன்.!!
No comments:
Post a Comment