Thursday, 9 October 2014

ஒருநிலையில் தனிமை
பழகிப்போகும்.
அந்த இருட்டில் கண்கள்
பார்க்கத் தொடங்கிவிடும்.
தனிமை அழகு.!!


கடக்க கடக்க தூரம்
நினைக்க நினைக்க பாரம்
வாழ்க்கை ரொம்ப மோசம்

நீயில்லாத இவ்வாழ்வை,
வாழும் இந்நகரத்தை,
கரையாத இந்நாளை,
கனவுகளில் மட்டும் 
பூக்கும் உன்னை,
சிறு தூசியென
உதற முடியவில்லை.!

No comments:

Post a Comment