பேசும் குரலில் அவர் பாடுவதில்லை.
தடதடக்கும் தண்டவாளத்தை
சாந்தப்படுத்துவது போல்
தொடைகளைத் தட்டி,
பாடுகையில்
தோன்றி மறைகிறது
கலர்கலர் பேனாக்களும்
பனிக்குல்லாயும்.
பனிப்பாறை மீதமர்த்தி
உருகவிடுவதும்,
கங்கு தீயை உள்ளில் வீசுவதும்
எனது நாட்களை
தகவமைத்துக் கொண்டிருந்தார்.
பணி ஒய்வு பெற்ற நாளில்
பரிசளித்த பனிக்குல்லாயை
திருப்பித் தந்தவாறு
‘என் மனைவிக்கு நான்
பாடுவது பிடிக்காது’
எனச்சொல்லிச் சென்றார்.
அந்தக்குரல் குளிரில்
நடுங்கும் ஒருவனுடையது.!!
தடதடக்கும் தண்டவாளத்தை
சாந்தப்படுத்துவது போல்
தொடைகளைத் தட்டி,
பாடுகையில்
தோன்றி மறைகிறது
கலர்கலர் பேனாக்களும்
பனிக்குல்லாயும்.
பனிப்பாறை மீதமர்த்தி
உருகவிடுவதும்,
கங்கு தீயை உள்ளில் வீசுவதும்
எனது நாட்களை
தகவமைத்துக் கொண்டிருந்தார்.
பணி ஒய்வு பெற்ற நாளில்
பரிசளித்த பனிக்குல்லாயை
திருப்பித் தந்தவாறு
‘என் மனைவிக்கு நான்
பாடுவது பிடிக்காது’
எனச்சொல்லிச் சென்றார்.
அந்தக்குரல் குளிரில்
நடுங்கும் ஒருவனுடையது.!!
No comments:
Post a Comment